Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட வல்லாரை கீரை...!

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட வல்லாரை கீரை...!
வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.
வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக  விளங்குகிறது.
 
வல்லாரை கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை  மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
 
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. 
 
வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில்  உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
webdunia
யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். 
 
இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
 
மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும்  பயன்படுத்த முடியும். 
 
வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
 
மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. 
 
தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். 
 
வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு  நம்மை நெருங்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெரிகோஸ் வெயினால் ஏற்படும் பிரச்சினையை குறைக்கும் வழிகள்...!