Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பயன் தரும் ஆரோக்கிய குறிப்புகளும் பயன்களும் !!

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:50 IST)
கொத்தமல்லி விதையை தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி இரவில் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் தீரும். புடலங்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும் மற்றும் மலச்சிக்கல் தீரும்.

தயிரை உடம்பில் தேய்த்தது குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வேர்க்குரு வந்தாலும் குணமாகிவிடும்.உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். மாதவிடாய் கோளாறும் தீரும்.

புடலங்காயின் இலைச்சாறு குழந்தைகளுக்கு காலையில் கொடுத்தால் கக்குவான், இருமல் போன்ற நோய்கள் குணமாகும். அருகம்புல் சாற்றுடன் மோர் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு (சர்க்கரையின் அளவு) குறையும்.

கை, கால் சுளுக்கு உள்ளவர்கள் மிளகு தூளும், கற்பூரத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவினால் சுளுக்கு குணமாகும். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெய்யைத் தடவினாலும் சுளுக்கு குணமாகும்.

முள்ளங்கியை சமைத்து தினதோறும் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட மூலநோயும் குணமாகும். பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு, தலைச்சுற்றல் போன்ற நோய்கள் வராமல் கட்டுப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments