Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்த வைத்தியத்தில் கூறப்படும் சில நோய்களுக்கான தீர்வுகள்

சித்த வைத்தியத்தில் கூறப்படும் சில நோய்களுக்கான தீர்வுகள்
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால்  மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
 
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில்  போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
 
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
 
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர  சரும நோய் குணமாகும்.
 
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
 
சுக்கு , பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கல்ந்து சாப்பிட தொண்டை கரகரப்பு  குணமாகும்.
 
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியப்பின்  தலைமுடியை அலசினால் முடி நன்கு வலருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
 
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி  வந்தால், புண் குணமாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளு துவையல் செய்ய...!