Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெந்நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா...?

வெந்நீர் குடிப்பதால் இத்தனை பயன்களா...?
வெந்நீர் தொண்டை, மூக்கடைப்புக்கு நல்லது. கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும், தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான வெந்நீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்.

வெந்நீரைக் குடித்தால் நச்சுக்கள் அகலும். வெந்நீர் குடித்தவுடன் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது. 
 
எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும், முகமும் பொலிவடையும்.
 
நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும், நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் கரைந்து விடும்.
 
இரத்த ஓட்டத்தைப் போலவே, குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச்சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான வெந்நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் அதிகரிக்கும்.
 
தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான வெந்நீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து எடையும் குறையும். எலுமிச்சை சாற்றை வெந்நீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
 
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரண்டை உப்பின் மருத்துவ குணங்கள் என்ன...?