Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிட கூடாத உணவுகள் ...?

திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிட கூடாத உணவுகள் ...?
பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன்  உள்ளது. 
சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும.; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட்  பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
 
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதனை சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை  உண்டாக்கும். மேலும் செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச்  சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
 
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக  மாறும். இது, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
 
காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை  சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
 
அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை  அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
 
உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; இதனால் வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
 
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. இது புற்றுநோய், இதய  நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
 
பீட்ரூட்டும் மற்றும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து  பயன்படுத்தக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை...!