Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மூலிகைகளும் அதன் அபார பயன்களும் !!

அற்புத மூலிகைகளும் அதன் அபார பயன்களும் !!
மலைவேம்பு - 10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும். மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.

முடக்கறுத்தான் - இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.
 
வல்லாரை - இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.
 
விஷ்ணுகிரந்தி - சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும். சுரத்துக்கான குடிநீரில் சேரும்.
 
மாவிலங்கம் - இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும். பட்டை - 1 பங்கு, பூண்டு - அரை பங்கு; மிளகு - கால் பங்கு அரைத்துக்  கொட்டை பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.
 
மூக்கிரட்டை - இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம். இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
 
மருதம் - மருத இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு ஆகியவை தீரும். பட்டைத் தூளுடன் ஆடாதோடைச்சாறு - 1  தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தரும். பட்டைக் குடிநீர் இதய நோய்களை குணமாக்கும்.
 
மகிழம் பட்டை - பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய்க்கொப்பளிக்க வாய்ப் புண்ணாறும். காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பப் பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்களில் ஏற்படும் வீக்கம் குறைய செய்யவேண்டிய மருத்துவ குறிப்புகள் !!