Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்தரும் பப்பாளி விதைகள் !!

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்தரும் பப்பாளி விதைகள் !!
பப்பாளி பழம் மிக சுவையானது. பழத்தின் பயன்கள் அனைவரும் அறிந்தவை தான். ஆனால் நம்மில் பலருக்கு பப்பாளி பழத்தின் கொட்டையின் பயன்கள் தெரியாமல் கொட்டையினை வீசி விடுகிறோம்.

பப்பாளி விதையை நன்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அதை சிறிது அளவு எலும்பிச்சை சாறுடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்கலாம். அல்லது பப்பாளி விதையின் பொடியை உணவில் கலந்தும் சாப்பிடலாம். தினமும் சாப்பிட்டால்  கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
தினமும் 8-10 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பப்பாளி விதையினை நன்கு தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அதை ஆற வைத்து குடித்தால்  கல்  வராமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. விதை கிடைக்காதவர்கள் பொடியினை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.
 
250 மில்லி பால் எடுத்து கொள்ள வேண்டும். அதை 100 மில்லி பால் ஆக சுண்டும் வரை காட்சி ஆற வைக்க வேண்டும். அதில் ஒரு கரண்டி பப்பாளி விதை பொடியை கலக்க வேண்டும்.  அந்த பாலை தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் டைபாய்டு டெங்கு குணமாகிவிடும். உடலில் எதிர்ப்பு  சக்தி கூடும்.
 
பப்பாளி விதையினை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட வேண்டும். விதை இல்லாதவர்கள் பொடியை நீரில் கலந்து குடித்தால் புழு இறந்து விடும்.  அல்லது இனிப்பு சாப்பிட்டவுடன் 4-5 விதையை நன்கு மென்று முழுங்க வேண்டும்.
 
பப்பாளி விதை பொடியினை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் 30 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசி குளிக்க வேண்டும். முடி அடர்த்தியாக வளரும். மேலும் விதையில் உள்ள ஒலீயிக் ஆசிட் பொடுகு வராமல் தடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓமம் நீரின் அற்புத மருத்துவ பயன்கள் !!