Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் உண்டாகும் பலன்கள் !!

தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் உண்டாகும் பலன்கள் !!
ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் நமக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்காது. தினமும் காலையில் எண்ணெய்யை ஊற்றி கொப்பளித்து வந்தால் நமக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது இன்னும் நமக்கு நல்ல பலனை தரும்.

தினமும்  ஆயில் புல்லிங் செய்து வந்தால் நம்முடைய மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. மூட்டுகளில் ஏற்படும் வலியை இது குணமடைய செய்யும். மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கும். எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
 
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். வெறும்வயிற்றில் நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
 
பல் துலக்குவதற்கு முன் காலையில் எழுந்தவுடன் இந்த ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நாம் வெள்ளையான பற்களை பெற முடியும். மேலும் தினமும் இவ்வாறு செய்வதால் ஈறுகளுக்கு வலிமை வரும். நம்முடைய ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதையும் இதான் மூலம் தடுக்க முடியும். எனவே தினமும் ஆயில் ப்யல்லிங் செய்வது நமக்கு நன்மை தரும்.
 
ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு இருக்கும் பார்வை கோளாறை சரி செய்து கொள்ளலாம். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு சோர்வு இல்லாமல் இருக்கும். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்வு தரும் சிறுகுறிஞ்சான் !!