Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பனங்கற்கண்டில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் !!

பனங்கற்கண்டில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் !!
நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.

பனை மரத்தில் இருந்து மனிதர்கள் சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து  செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.
 
வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
 
நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.
 
பனங்கற்கண்டு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை குணமாக்குகிறது. உடலை நல்ல பலத்துடன் வைக்கிறது.
 
ஞாபத்திறன் மேம்பட, சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.
 
பனங்கற்கண்டை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்களை எந்த முறையில் சாப்பிடுவதால் பலன்கள் கிடைக்கும்...?