Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீர் தாரை தொடர்பான நோய்களை குணமாக்கும் நித்திய கல்யாணி !!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (18:26 IST)
நித்தியகல்யாணி செடி நம் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டை ஆக்சைடை தனக்குள்ளே உட்கிரகித்துக் கொண்டு, 100 சதவீதம் ஆக்சிஜனை நமக்கு தருகிறது. ஆகவே இதனை தாராளமாக நம் வீட்டில் வைத்து வளர்க்கலாம்.


நித்திய கல்யாணியின் பூக்களை தேவையான அளவு தண்ணீரில் போட்டு காய்ச்சி கால் பங்கு அளவிற்கு வற்றி வரும் பொழுது அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு 4 வேளை வீதம் எடுத்து வந்தால், அதிக தாகம், அதிக சிறுநீர்ப் போக்கு, அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும்.

நித்தியகல்யாணி பூக்களை கஷாயம் செய்து தினமும் நான்கு வேளைகள் 25 மில்லி அளவு எடுத்து வர நோய் விரைவில் குணமாகும். நித்திய கல்யாணி வேரை, காய வைத்து பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வர சிறுநீர் தாரை தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமடையும்.

உடல் அசதி குணமாக நித்யகல்யாணி பூக்களை தண்ணீரில் இட்டு, பாதியாக சுண்ட காய்ச்சி குடித்து வரலாம். நித்தியகல்யாணி வேருடன், மிளகு சீரகம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தேநீராக்கி பருகுவதால், பல் வலி, உடல் வலி ஆகியன நீங்கும்.

நித்திய கல்யாணி பூக்கள், இலைகள்,  மாதுளை தோல் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு அதனை, அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட அதிக இரத்தப் போக்குடன் கூடிய மாதவிலக்கு குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments