Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சௌசௌ காயில் சட்னி செய்யலாம் தெரியுமா...?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (17:53 IST)
தேவையான பொருட்கள்:

சௌசௌ - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப.

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது.


செய்முறை:

சௌசௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.

வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும். விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுவையான சௌசௌ சட்னி தயார்.

குறிப்பு: இந்த சட்னி தயார் செய்ய இளம் சௌசௌவை தேர்வு செய்யவும். சௌசௌ கலவையை அதிக நேரம் அடுப்பில் வைத்து வேக விட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments