Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள வேப்பம் பூ !!

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள வேப்பம் பூ !!
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:41 IST)
வேப்பம் பூவை ஊறவைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதால் நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்று சரி ஆகிவிடும். மேலும் இது அல்சருக்கும் அருமருந்து.


கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் மற்றும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வேப்பம்பூ கட்டுப்படுத்துகிறது.

வெயிலினால் ஏற்படும் நாவறட்சி, அரிப்பு, தோல் வியாதி, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வேப்பம் பூவை மென்று தின்றால் வாயுத்தொல்லை, அதிகமாக ஏப்பம் வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம்பூவை தொடர்ந்து சிறிதளவு உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுகிறது.

வெயிலில் காயவைத்துப் பொடி செய்த வேப்பம் பூவை, பருப்புப் பொடியுடன் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் வராது.

வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும். வேப்பம் பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன தெரியுமா...?