Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சில மூலிகை செடி வேர்களின் மருத்துவ பலன்கள் !!

சில மூலிகை செடி வேர்களின் மருத்துவ பலன்கள் !!
ஆவாரை வேர்: முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால், ஆவாரை வேரை எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும்.
 

நொச்சி வேர்: நொச்சி வேர் ஒருபிடி, வேப்பெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து மண்சட்டியில் விறகு அடுப்பில் காய்ச்சி மார்பு, விலா, முதுகு ஆகிய இடங்களில் தடவி வர ஆஸ்துமா குறையும்.
 
கீழாநெல்லி வேர்: கீழாநெல்லி வேருடன், சீரகம் கொஞ்சம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையை தினமும் சாப்பிட்டு காய்ச்சிய பசும்பால் 1 டம்ளர் குடித்துவர, சிறுநீர் கடுப்பு பிரச்னை நீங்கும்.
 
முற்றின வெள்ளைக் கற்றாழை வேர்: வெள்ளை கற்றாழை வேரை நிழலில் உலர்த்தி அதை நன்றாகப் பொடி செய்து நெய்யில் குழப்பி கண்ணில் ஒற்றிக்கொள்ள கண்ணில் உள்ள பூ போகும்.
 
தூதுவளை வேர்: தூதுவளை வேரையும், தூதுவளைக் கீரையுடன் ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூதக வாயு சம்பந்தமான வியாதிகள் குணமாகி, மலத்தை இளக்கும்.
 
ஆலமரத்தின் வேர்: ஆலமரத்தின் இளம் வேர்களுடன், செம்பருத்திப் பூவையும் காய வைத்து இடித்துத் தூள் செய்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக வளரும்.
 
நன்னாரி வேர்: நன்னாரி வேரை கற்றாழைச் சோற்றுடன் கலந்துண்ண விஷக்கடியினால் உண்டாகும் பக்க விளைவுகள் குணமாகும். நன்னாரி வேரையும், ஆலம்பட்டையையும், ஆவாரம்பூவையும் சேர்த்து கஷாயம் செய்து வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் முகத்தில் படரும் கருமை போய்விடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்று பிரச்சினைகளுக்கு நல்ல நிவாரணம் தரும் கடுக்காய் !!