Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரட் கீரையில் உள்ள நன்மைகள் என்ன தெரிந்துக்கொள்வோம்...!!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (12:21 IST)
கேரட் கீரை நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கேரட் கீரை முடக்கு வாதத்திற்கு ஒரு சிறந்த மருந்தாகும். முடக்கு வாதத்திற்கு உட்பட்டவர்களின் உடலிலுள்ள நோய் பாதிப்புக்கு ஆளாகாத உறுப்புகளை இக்கீரை வலுப் படுத்துகிறது.

இரத்தத்தைப் பெருக்க வைப்பதில் இக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் பீட்ருட் கீரை முதலியன இரத்த விருத்திக்குப் பயன்படுபவைகள்.  கேரட் கீரை தாதுபலத்தைக் கொடுக்கும்.
 
நூறு கிராம் கீரையில் 300 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 110 மில்லிகிராம் மணிச்சத்தும், 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன. இக்கீரையில் உயிர்ச்சத்துகள் மிகுதியாக உள்ளன. 
 
நூறு கிராம் கேரட் கீரையில் தயாமின் 0.04 மில்லிகிராம் இருக்கிறது. ரைபோஃளேவின் 0.20 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 0.6 மில்லி கிராமும், வைட்டமின் சி 79 மில்லி கிராமும் அடங்கியிருக்கின்றன.
 
உடலின் இரத்தத்திலுள்ள நச்சுத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. இக்கீரையின் கஷாயம் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைக்கும் தன்மையைப் பெற்றது. வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு இந்தக் கேரட் கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.
 
இக்கீரையைப் பச்சையாக வாயிலிட்டு மென்று பல்துலக்க பல் ஈறுகள் வலுப்பெறும். இவ்வாறே முதிர்ந்த கீரையின் பூத்த நிலையிலுள்ள தண்டுகளைப் பல் விளக்கும் பல் குச்சியாகப் பயன்படுத்தலாம். இவைகள் பல்லுக்கு வலுவூட்டி பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு, ஈறு வீக்கம் முதலிய நோய்களைக் குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments