Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவகுணம் அதிகம் நிறைந்துள்ள கஸ்தூரி மஞ்சள்...!!

மருத்துவகுணம் அதிகம் நிறைந்துள்ள கஸ்தூரி மஞ்சள்...!!
கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவதன்  மூலம் நம் சருமத்தின் ஏற்பட்டிருக்கும் வீக்கம் அழற்சி போன்றவர்களை அழித்துவிடும்.

இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளரும். இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து  முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகமும் பொலிவு பெரும்.
 
சரும பிரச்சனைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து பாதுகாப்பு படலமாக செயல்படுகிறது இந்த கஸ்தூரி மஞ்சள். இதனால் முகத்தில் ஏற்படும்  முகப்பரு, கட்டிகள், சரும பிரச்சனைகள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்த உதவுவது இந்த கஸ்தூரி மஞ்சள்.
 
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் வராமல் தடுக்கும். கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தினால் கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.
 
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து, இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை சரியாகும்.
 
கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.
 
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் பாதுகாக்கும்.
 
கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் சரியாகும். வறண்ட சருமம், எண்ணெய்  சருமம் உடையவர்கள் கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 7.67 லட்சத்தை தாண்டிய பாதிப்புகள்! – மாநிலவாரி நிலவரம்!