Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மல்லிகைப்பூ !!

Advertiesment
மருத்துவ குணம்
சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.
 
தாய்மார்களுக்கு மார்பில் கட்டியுள்ள்ள பாலை வெளியேற்றவும் வழியை நீக்கவும் மல்லிகைப்பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று  போட்டால் வலி குறையும்.
 
மாதவிலக்கின் பொழுது ஏற்படும் ரத்த போக்கினால் சோர்வடையும் பொழுது பூவை நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் குடித்தால் சோர்வு நீங்கும்.
 
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
 
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம்  குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்காச்சோளத்தில் உள்ள சத்துக்களின் முக்கிய பங்கு என்ன...?