Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரத்தசோகையை போக்க அடிக்கடி இவற்றை சாப்பிடுவது நல்லது...!!

இரத்தசோகையை போக்க அடிக்கடி இவற்றை சாப்பிடுவது நல்லது...!!
ஆரோக்கியமானவர்களைவிட, இரத்த சோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். இரத்தசோகையின் காரணமாக வைட்டமின் பி 12  குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது.

உடலில் தேவையான அளவு இரும்புச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்காக இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம். 
 
கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. வலிநிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும்  மருந்துகளாலும் ரத்தசோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தைச் சரி செய்யவேண்டும்.
 
இத்தகைய இரத்தசோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம்,  மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் இரத்தம் விருத்தி அடைந்து,  இரத்தச்சோகை நீங்கும். 
 
முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலனளிக்காத கோவுட் ஷீல்ட்; தயாரிப்பில் குழப்பம்! – அஸ்ட்ரா ஜெனிகா அறிவிப்பு!