Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதாம் பிசினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் என்ன...?

பாதாம் பிசினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் என்ன...?
பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது
பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

 
உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள். இதனை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.
 
கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
 
நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
 
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை  நீங்கும்.
 
குழைந்தை பெற்ற தாயமார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும், வட இந்தியாவில் குழைந்தை பெற்ற பெண்களுக்கு பாதாம் பிசின் கலந்த லட்டு இனிப்புகள் கொடுப்பது இன்றும் நடை முறையில் உள்ளது.
 
பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்துள்ள சங்குப்பூ...!!