Publish Date: Sat, 02 Apr 2022 (12:13 IST)
Updated Date: Sat, 02 Apr 2022 (12:23 IST)
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு பொடியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து குடிப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
சோம்புத் தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சோம்புத் தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
சோம்பை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், ஜலதோஷம் பிரச்சினை உடனே சரியாகிவிடும்.
சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.