Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கீழாநெல்லி!

தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கீழாநெல்லி!
மஞ்சள் காமாலையை குணப்படுத்த கூடியதும், சிறுநீர்தாரை எரிச்சலை சரிசெய்ய கூடிய தன்மை கொண்டதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான கீழாநெல்லியின் நன்மைகள் குறித்து காணலாம்.அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி.
கீழாநெல்லியை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, மோர். செய்முறை: கீழாநெல்லியை அரைத்து  ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து உப்பில்லாத மோரில் சேர்த்து கலக்கவும்.
 
கீழாநெல்லி இலைகளின் கீழ் காய்களை கொத்தாக பெற்றுள்ளது. மிகுந்த கசப்பு உடையது. ஈரல் நோய்களை குணப்படுத்துகிறது. கல்லீரல், மண்ணீரலுக்கு மருந்தாகிறது. தோல்நோய்களை போக்கும் தன்மை உடையது. தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்கும். பித்தத்தை போக்கும். வெள்ளைபோக்கு  பிரச்னையை தீர்க்கிறது.
 
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மஞ்சள் காமாலை சரியாகும். இந்த சமயத்தில், மஞ்சள் காமாலைக்கான பத்திய உணவு எடுக்கவும். வெள்ளைப்படுதல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, பால். செய்முறை: 50 மில்லி பாலுடன்,  கீழாநெல்லி இலைசாறு 10 முதல் 20 மில்லி சேர்த்து கலந்து காலை, மாலை குடித்துவர வெள்ளைப்படுதல் சரியாகும். உடல் பலவீனம் சரியாகும். உஷ்ணத்தை  குறைத்து குளிர்ச்சி தருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல்நலம் காக்க சில எளிய டிப்ஸ்...!