Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும் நெல்லிக்காய் ஜூஸ் !!

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும் நெல்லிக்காய் ஜூஸ் !!
நெல்லிக்காயின் சுவை இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்தது பெரும்பாலும் கசப்பு துவர்ப்பு உள்ள காய்கள் பல நோய்களை குணப்படுத்துவதாக கருதப்படுகிறது.

எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின்  சி சத்து அதிகமாக உள்ள கனி நெல்லிக்கனி. ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம்.
 
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
 
இந்த விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும். நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள் உடலில் வயது மூப்பு அதாவது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
 
நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். தினமும் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து இரண்டு வேளை குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்
 
நம் உடலில் கல்லீரல் என்பது நாம் உண்ணும் உணவில் அல்லது வேறு வடிவிலோ ரத்தத்தில் நச்சுக் கிருமிகள் சேரும்போது அதை நீக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரலில் ஏற்படும் நோய் மஞ்சல் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வர இந்த நோய் வராமல் நாம் கல்லீரலை பாதுகாக்கலாம்.
 
நாம் உண்ணும் உணவானது நம் உடலில் சுரக்கும் பித்தம் சேர்ந்து ஜீரணம் வருகிறது. இந்த  பித்தம் சுரக்கும் உறுப்பு பித்தப்பையாகும். இதில் ஏற்படும் கற்கள் போன்றவற்றை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமைசாமந்தி மலர்களை டீ செய்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!