Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துளசி இலை ஊறவைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

துளசி இலை ஊறவைத்த நீரை குடிப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:34 IST)
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.


துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.

துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.  துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.

துளசி இலை சாற்றுடன், தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கற்களை சிறுநீர் பாதை வழியாக உடனடியாக வெளியேற்றும். மேலும், துளசி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

துளசி பொடியினை பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம். ஏனெனில், இது வாய் துர்நாற்றம் மற்றும் பைரோரியா போன்ற நோய்களைத் தடுக்க உதவும். அதுமட்டுமின்றி, துளசி பல சொத்தை, பலவலி மர்றும் பற்குழிகள் ஆகியவற்றின் மேலாண்மைக்கு உதவுகிறது.

துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும வறட்சியை போக்குவதற்கான மிகச்சிறநத தீர்வு எது தெரியுமா...?