Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடுக்காய் தூளை எந்த முறையில் சாப்பிடவேண்டும் தெரியுமா...?

கடுக்காய் தூளை எந்த முறையில் சாப்பிடவேண்டும் தெரியுமா...?
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
கடுக்காய் தூளை இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம்  குணமாகும். 
 
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும். 
 
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும். 
 
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில்  குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
 
கடுக்காயில் உள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். கொட்டை விஷ தன்மையுடையதால் அதனை நீக்கி விடுவது நல்லது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முட்டை கீமா செய்வது எப்படி...?