கத்தரிக்காயை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:10 IST)
கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள செரிமான மண்டலத்தைப் பாதுகாக்கிறது. கத்தரிக்காயில் இருக்கக்கூடிய ரசாயனங்கள், உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் அதாவது டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றுகின்றன. 

கத்தரிக்காயில் உள்ள விட்டமின் கே, இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தவிர்க்கிறது. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதில் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவு உள்ளது.
 
கத்தரிக்காயை அடிக்கடி உணவில்  சேர்த்து கொண்டால் இயற்கையாகவே நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள்,  தூசிகள் எல்லாமே சளி மூலமாக வெளியேறி நுரையீரலும் சுத்தமாகும்.
 
கத்தரிக்காயை வறுத்துச் சாப்பிடுவது பயனற்றது, எனவே கத்தரிக்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது. கத்தரிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
 
கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தக் குழாய்களில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரைகிறது, இதய தசைகள் நன்கு வலுப்பெறுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.
 
கத்தரிக்காயில் கலோரிகள் இல்லை. எனவே கொழுப்பு சத்து இதில் இல்லை. அதுமட்டுமின்றி கத்தரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நல்லெண்ணெய்: மூட்டு ஆரோக்கியத்திற்கும் உடல் நலனுக்கும் ஒரு வரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments