Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி தூதுவளை கீரையை உண்பதால் கிடைக்கும் பயன்கள் !!

அடிக்கடி தூதுவளை கீரையை உண்பதால் கிடைக்கும் பயன்கள் !!
தூதுவளை இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை பத்தியத்துடன் உண்டு வர இளைப்பு நீங்கி உடல் வலிமை பெறும். இருமல் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.

தூதுவளையை மைபோல் அரைத்து சின்ன வெங்காயம் சேர்த்து அடைபோல் செய்து சாப்பிட்டு வர தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல்,  நமைச்சல், பெரு வயிறு மந்தம் போன்றவைகளுக்கு தூதுவளை ஓரு அரு மருந்தாகும்.
 
தூதுவளை பழத்தை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு சளி, இருமல் நீங்கும். பாம்பின் விஷம் முறியும்.
 
தூதுவளை காயை சமைத்தோ அல்லது காயவைத்து வற்றலாக செய்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் நீங்கும். தூதுவாளை பூவை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து உண்டு வர உடல் பலம் பெறும்.
 
தூதுவளை இலையை குடிநீராக அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் வராது. தூதுவளையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறை கீரையாக சமைத்து உண்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 
தூதுவளை கீரை அடிக்கடி சமைத்து உண்டு வர புற்றுநோய் ஏற்படாது. தொண்டை புற்று, கருப்பை புற்று, வாய்ப் புற்று ஆகியவைகளுக்கு தூதுவளை ஓரு  அருமருந்தாகும்.
 
தூதுவளை இலை 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 200 மி.லி வந்தவுடன் இறக்கி 30 மி.லி முதல் 40 மி.லி வரை மூன்று வேளை இந்த கஷாயத்தை குடிக்க இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?