Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!
வெண்டைக்காயை வெட்டி பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி, இரவு முழுவதும் ஊற வையுங்கள் குறைந்தது 8 மணி நேரமாவது ஊற வேண்டும்.

இந்த நீர் நமது உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கி உணவு செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் செய்கிறது. மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வெண்டைக்காய் தண்ணீர் மிகச்சிறந்த பலன்களை கொடுக்கின்றது.
 
இந்த நீரை குடிப்பதால் இரத்த செல்கள் உற்பத்தியாகும் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும் அதோடு இதில் இருக்கும் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது 
 
தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றது. தொடர் இருமல் வரட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  வயிற்றுப் போக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்துவிடும்
 
நமது உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் இதனால் வெளியேறிவிடுகிறது. அதனை சரிகட்ட வயிற்றுப் போக்கினை நிறுத்தும் வெண்டைக்காய் சாற்றை குடிக்கும் போது சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
 
இந்த நீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடுத்து பசி உணர்வு சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் ஊறவைத்த தண்ணீரை குடித்து வரும்போது பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
 
அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றது அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் எந்த பயமுமின்றி சாப்பிடலாம். வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து நாம் எடுத்து வரும்போது அது நமது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து நமது இதயத்தையும் பாதுகாக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவும் முட்டை !!