Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!
அனைத்து சமையலிலும் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு பொருளுக்கு சுவையையும், மணத்தையும் தரக் கூடியது. இது உணவு பொருள்களில் மட்டுமில்லாமல் தேநீர் தயாரிக்கவும் பயன்படுகிறது. 

ஏலக்காயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, பி, சி, போன்றவை அதிக அளவில் உள்ளன. ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
 
ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
 
இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும்.
 
தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
 
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
 
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளம்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?