Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் கோவைக்காயை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!

அன்றாட உணவில் கோவைக்காயை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்...!!
நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ் படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில், பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும் இந்த கோவைக்காய் குணமாக்குகிறது.
கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு  நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
 
சொரியாஸிஸ், படை, சிரங்கு தேமல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன்  கிடைக்கும். இவ்வாறு குடிப்பதற்கு முன் வயிற்றை சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.
 
தலையில் பொடுகு, முடி உதிர்வு இவைகளுக்கு இந்த கோவைக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த சக்கையை எலுமிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால், பொடுகு ஏற்படுவது குறைந்துவிடும்.
 
பல் வலி, ஈறுகளில் வலி மற்று வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவைக்காய் ஜூஸ் குறைக்கிறது.
 
தினமும் கோவைக்காய்சாறு குடித்து வந்தால், சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும்  கட்டுப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன...?