Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்!

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளும் அதன் பயன்களும்!
இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து. மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

 
* அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.
 
* ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.
 
* ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.
 
* தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.
 
* நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
 
* நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்.
 
* முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.
 
* வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.
 
* அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.
 
* வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.
 
* நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
 
* நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.
 
* சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.
 
* மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.
 
* திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கையில் கிடைக்கும் பீர்க்கங்காயின் மருந்துவ குணம் பற்றி தெரிந்துகொள்வோம்...!