Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாசக்குழாய் சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கும் அற்புத மூலிகை தூதுவளை !!

Thuthuvalai
, புதன், 13 ஜூலை 2022 (11:14 IST)
தூதுவளையில் அடிப்படையிலேயே இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமிருப்பதால், இவற்றை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும், ஆரோக்கியமாகும்.


தூதுவளையில் வைட்டமின் சத்து அதிகமிருப்பதால், கண் பார்வை தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் தூதுவளை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் பிரச்னை சரியாகும். கண் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவார்கள் தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

சிறு குழந்தைகளுக்கு, சளி கட்டியால் ஏற்படும் தொந்தரவு சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். அதேபோல செரிமானம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, அதுவும் சரியாகும்.

தைராய்டு, ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையோடு இதை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் முன்னேற்றத்தை காணலாம்.

தூதுவளை, ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். இரும்புச்சத்து அதிகமிருப்பதால் கர்ப்பிணிகளும் பெண்களும் மாதவிடாய் சார்ந்த சிக்கலிருக்கும் பெண்களும் இதை உட்கொண்டால், ரத்தசோகை பிரச்னை சரியாகும்.

சுவாசக்குழாய் சார்ந்த பிரச்னைகள் குணமாகும் என்பதால், மூச்சுக்குழாய் தொடர்பான புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை தடுக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பளபளப்பான முகத்தை பெற சில எளிமையான வழிகள் !!