Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் கிடைக்கும் வெற்றிலையில் உள்ள அற்புத நன்மைகள் !!

Webdunia
வெற்றிலையை பயன்படுத்தும் போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி விட்டு உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையை கசக்கி அதன் சாறை உறுஞ்சினாள் சளி மற்றும் தலை பாரம் தீரும். குழந்தைகளுக்கு வெற்றிலையில் 5,6 துளசி இலைகளை வைத்து கசக்கி சாறு பிழிந்து கொடுக்கலாம்.
 
மாலை நேரத்தில் வெற்றிலையுடன் சிறிதளவு மட்டும் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டால் வாய்புண், வாயில் துர்நாற்றம், வயிற்று புண் குணமாகும். 
 
வெற்றிலையுடன் பாக்கு குறைவாகவும் சுண்ணமாபு அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை இருப்பவர்களுக்கு நல்ல பசியை தூண்டும்.
 
வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிரிப்பு சக்தி கொண்ட சவிக்கால் என்னும் பொருள் இருப்பதால் உடல் பலவீனம், சோம்பல், மந்தம் உணர்பவர்களுக்கு சிறந்தது.
 
வேலை அலைச்சல் அல்லது, அடிபட்ட இடத்தில் வலி ஏற்படும் நேரங்களில் ஒரு வெற்றிலை போட்டு நன்கு மென்று நீர் அருந்தினால் வலி குறையும்.
 
வெட்டுக்கள், சிராய்ப்புகள் போன்ற இடங்களில் வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மேல் தடவி வந்தால் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.
 
சிலருக்கு சிறுநீர் போவதில் பிரச்சனை ஏற்படும். இதை குணமாக்க வெற்றிலை சாறை அவ்வப்போது பருகி வந்தால் நச்சுக்கள் நீங்கி சிறுநீர் பெருகி சரியான கால இடைவெளியில் சிறுநீர் போக உதவும்.
 
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி சாப்பிட்டு வந்தால் அணைத்து எலும்புகளும் வலுப்பெறும். மேலும் எலும்புகள் சுலபத்தில் பாதிப்படையாமலும், உடையாமலும் வலுவூட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

கோதுமை மாவு ஒன்று போதும் சருமம் மென்மையாக.. ஆச்சரிய தகவல்..!

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments