Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவகுணம் நிறைந்த சித்தரத்தை !!

அற்புத மருத்துவகுணம் நிறைந்த சித்தரத்தை !!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:20 IST)
சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும். மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். 
 
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. 
 
நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
 
நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக ஆஸ்துமா நோய் இருக்கிறது. இந்நோய் பாதிப்பு கொண்டவர்கள் மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது தினமும் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வருவர்களேயானால் அவர்களின் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறைந்து, சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
 
சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல மருத்துவ நன்மைகளை கொண்ட தேயிலை !!