Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முல்லைப் பெரியாறு:ஐவர் குழுவிடம் தமிழகம்-கேரளா அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு:ஐவர் குழுவிடம் தமிழகம்-கேரளா அறிக்கை தாக்கல்
புதுடெல்லி , வெள்ளி, 6 ஜனவரி 2012 (15:28 IST)
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஐவர் குழுவிடம் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழு,முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டி, அதனை இருமாநில கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் ஒப்பட்டைப்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள், தங்களது பதிலை தெரிவிக்குமாறு கூறி இருந்தது.

இதை தொடர்ந்து இரு மாநிலங்களின் சார்பிலும் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யபடுகிறது.

அதே சமயம் புதிய அணைக்கு தமிழகம் தரப்பில் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததால், இன்றையை அறிக்கையிலும் அதே கருத்துதான் இடம்பெறும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil