Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுத்தம்.. ஜொமைட்டோ அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (16:47 IST)
புகழ்பெற்ற உணவுப் பொருள் விநியோக நிறுவனம் ஜொமைட்டோ "15 நிமிடத்தில் உணவு" என்ற புதிய சேவையை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த சேவை தற்போது  சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
ஜொமைட்டோ எவ்ரிடே என அழைக்கப்பட்ட இந்த சேவை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் செயலில் இருந்தது. இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள உணவகங்களில் இருந்து மிக விரைவாக, 15 நிமிடத்துக்குள் உணவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக இது செயல்பட்டது.
 
ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செயல்முறை பிரச்சனைகள் ஆகியவை இந்த சேவையை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
 
மேலும் செப்டோ கஃபே, பிளிங்கிட் பிஸ்ட்ரோ, பிக்பாஸ்கெட் போன்றவையுடன் போட்டியிட ஜொமைட்டோ பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில சேவைகள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும், அவை மறுசீரமைப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சேவையும், விரைவில் புதுப்பிப்பு செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுவிட்டது.. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..!

1000 பள்ளிகளை மூட உத்தரவு.. உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உண்மைதான்: பெனாசிர் புட்டோ மகன்

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments