Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுத்தம்.. ஜொமைட்டோ அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (16:47 IST)
புகழ்பெற்ற உணவுப் பொருள் விநியோக நிறுவனம் ஜொமைட்டோ "15 நிமிடத்தில் உணவு" என்ற புதிய சேவையை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த சேவை தற்போது  சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
ஜொமைட்டோ எவ்ரிடே என அழைக்கப்பட்ட இந்த சேவை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் செயலில் இருந்தது. இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள உணவகங்களில் இருந்து மிக விரைவாக, 15 நிமிடத்துக்குள் உணவை வீடுகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக இது செயல்பட்டது.
 
ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செயல்முறை பிரச்சனைகள் ஆகியவை இந்த சேவையை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
 
மேலும் செப்டோ கஃபே, பிளிங்கிட் பிஸ்ட்ரோ, பிக்பாஸ்கெட் போன்றவையுடன் போட்டியிட ஜொமைட்டோ பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில சேவைகள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும், அவை மறுசீரமைப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சேவையும், விரைவில் புதுப்பிப்பு செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments