Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிவரி பாய் கெட்டப்பில் சென்ற Zomato CEO! - அவமரியாதை செய்த Mall ஊழியர்கள்?

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (17:54 IST)

டெலிவரி பாய் கெட்டப்பில் சென்ற ஸொமாட்டோ நிறுவன செயல் அதிகாரியை ஷாப்பிங் மால் ஊழியர்கள் அவமரியாதை செய்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்தியா முழுவதும் பெருநகரங்களில் உணவை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து சாப்பிடுவது ஒரு பழக்கமாக மாறியுள்ள நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை அதிகரித்துள்ளது. அப்படியாக இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று ஸொமாட்டோ.

 

ஆனால் பொதுவாக பல நட்சத்திர உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் உணவு ஆர்டர் எடுக்க வரும் டெலிவரி பாய்களை கீழ்மையாக சிலர் நடத்துவதாகவும் சில புகார்கள் உள்ளன. 
 

ALSO READ: பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..
 

இந்நிலையில் ஸொமேட்டோ நிறுவன செயல் அதிகாரி தீபேந்திர கோயல் சமீபத்தில் டெலிவரி பாயாக மாறி ஒருநாள் மட்டும் உணவு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்துள்ளார். அப்படி ஒரு ஷாப்பிங் மாலில் உணவு ஆர்டர் எடுக்க சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை பொதுவழியை பயன்படுத்துவதற்கு தடை செய்ததுடன், லிஃப்டை பயன்பாடு இல்லாத மாடியில் ஏறி செல்ல சொல்லியிருக்கின்றனர்.

 

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுள்ள தீபேந்திர கோயல் “எங்கள் ஊழியர்கள் நலனுக்காக மால்களுடன் நாங்கள் இன்னும் இணக்கமாக செயல்பட வேண்டும் என உணர்கிறேன். அதேநேரம் மால்களும் டெலிவரி ஊழியர்களிடம் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்” என கருத்து தெரிவித்து அதுகுறித்து மக்களின் கருத்தையும் கேட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் வெற்றி கிடைத்தாலும் ஆட்சி அமைக்க வேண்டாம்: இந்தியா கூட்டணிக்கு எம்பி வேண்டுகோள்

5 பேரின் மரணமென்பது திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலை: சீமான்

காவல் உதவி ஆய்வாளரின் அட்டூழியம்!

2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்- முத்தரசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments