Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுகளை ஓடும் காரிலிருந்து வீசிய யூடியூபர்கள் கைது

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (17:22 IST)
பார்ஸி இணைய தொடரில் வந்தது போல்  ஓடும் காரிலிருந்து ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்த யூடியூபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஷாகித் கபூர், விஜய்சேதிபதி நடிப்பில், ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் வெளியான பார்ஸி வெப் தொடரில், பணத்தாள்களை வாரி இறைப்பதுபோல் ஒரு காட்சி வரும். இதேமாதிரி  செய்ய வேண்டுமென நினைத்து பணத்தை வாரி இறைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியானா மா நீலம் குருகிராம் நகரில் சென்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்து இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்தார். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதேபோல், இன்னொரு இளைஞரும் பணத்தை சாலையில் வாரி இறைத்தார்.  இதுகுறித்து,  அம்மாநில போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர்களான ஜோராவர் சிங், குர்ப்ரீத் சிங் ஆகிய இருவரைம் இன்று போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி கோல்ஃப் மைதான சாலையில்  காரில் செல்லும்போது இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments