பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

Mahendran
திங்கள், 31 மார்ச் 2025 (18:28 IST)
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று இரவு 9.30 மணியளவில், மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வுகளுக்கு பிறகு, பிரியங்கா காந்தி காரில் கொச்சி விமான நிலையத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தார்.
 
அந்த நேரத்தில், மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், அவரது பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் அனீஷ் ஆபிரஹாம், தனது காரை நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தார். காவல்துறையினர் அங்கு வந்து, அவர் வாகனத்தை அகற்றுமாறு கேட்டபோதும், அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு வாகனத்தின் போக்கினை தடுத்தது, உயிருக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, காவல்துறையினருக்கு அமைதி குழப்பம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக, பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments