Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 கால்களுடன் வாழ்ந்து வரும் வாலிபர்

4 கால்களுடன் வாழ்ந்து வரும் வாலிபர்
, வியாழன், 3 நவம்பர் 2016 (14:54 IST)
உத்திரபிரதேசத்தில் அருண்குமார் என்ற வாலிபருக்கு சிறுவயதில் இருந்தே 4 கால்கள் இருந்துள்ளது. சிறுவயதில் வளர்ச்சி அடையாத கால்கள் தற்போது வளர்ந்து உள்ளது. இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகி வருகிறார்.


 

 
உத்திர பிரதேச மாநிலத்தில் அருண்குமார்(22) என்ற வாலிபர் பிறக்கும் போதே 4 கால்களுடன் பிறந்துள்ளார். இந்த பிரச்சணை குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
 
இதையடுத்து புதுடெல்லியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் இருந்து அணுயுள்ளனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் மருத்துவமனைக்கு சென்றவுடன் என் உடலை பரிசோதனை செய்தனர். சீக்கிரம் ஆப்ரேஷன் நடந்து என் இரு கால்களும் அகற்றப்படும் நானும் எல்லோரும் போல வாழுவேன் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
 
இதனிடையே அருண்குமாரை சோதனை செய்த மருத்துவர்கள் கூறியதாவது:-
 
அவருக்கு நான்கு கால்கள் உள்ளதால் இரத்த ஓட்டம் எங்கிருந்து பாய்கிறது என பரிசோதித்து வருகிறோம். மேலும் அவருக்கு கூடுதலான சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை இருக்கிறதா எனவும் பார்த்து வருகிறோம். அதன் பின்னர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கூறமுடியும் என்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரடியை சாட்சியாக வைத்து நடந்த திருமணம்!!