Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''பஞ்சாபி பாடகர் கொல்லப்பட்டது போல் நீயும் , சல்மான் கானும் கொல்லப்படுவீர்கள்''- எம்பிக்கு வந்த கொலைமிரட்டல்!

Sanjay Raut
, சனி, 1 ஏப்ரல் 2023 (14:48 IST)
மராட்டியத்தில், சிவசேனாவின்( உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது
 

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து நடந்து வருகிறது.

இம்மா நிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார்.

இவருக்கு  பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது.

இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்துள்ளார். அதில்,'டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது போல் நீயும் கொல்லப்படுவாய்…நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார்' என்று மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சஞ்சய் ராவத் கூறியதாவது: ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான இந்த அரசு ஆட்சிக்கு வந்தபின் எங்கள் தலைவர்களின் பாதுகாப்பு குறைந்துள்ளது. இதுகுறித்து நான் கடிதம் எழுதவில்லை. முதல்வரின் மகன் கொலை கும்பலுடன் சேர்ந்து எங்களை கொல்லை சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் கண் முன்னே தாய் பலி