Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இருந்து விலகுகிறேன்: யஷ்வந்த் சின்ஹா அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:42 IST)
முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திரமோடியையும், அவரது ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக மோடி அரசின் பொருளாதார கொள்கைகளையும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் கடுமையாக குறை கூறினார். இருப்பினும் சீனியர் தலைவர் என்ற முறையில் கட்சி மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
 
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக சற்றுமுன் யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மேலும் வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். 
 
மேலும் அரசியல் வாழ்க்கையிலிருந்து துறவறம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும், மோடி ஆட்சியில் பலதுறைகளில் நாடு பின்தங்கிவிட்டதாகவும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments