Publish Date: Sun, 21 Apr 2019 (09:13 IST)
Updated Date: Sun, 21 Apr 2019 (09:19 IST)
கர்நாடகாவில் இளம்பெண்ணை கற்பழித்து எரித்துக் கொன்றவனின் மர்ம உறுப்பை வெட்டி எறியுங்கள் என யாஷிகா ஆவேசமாக பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் 23 வயது இளம்பெண் சிவில் என்ஞினியரிங் படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்கியபடி பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவனுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை யாஷிகா இந்த கொடூரமான செயலலை செய்தவனின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் ப்ளீஸ் என பதிவிட்டுள்ளார்.