Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் தலித் அர்ச்சகருக்கு வரவேற்பு அளித்த தலைமை அர்ச்சகர்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:11 IST)
கோவில்களில் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக இருந்த நிலையில் அனைத்து ஜாதியினர்களுக்கும் அர்ச்சகர் ஆகும் பணியை வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கேரள அரசு அறிவித்தது. இதன்படி அனைத்து ஜாதியினர்களும் எழுத்துத்தேர்வு எழுதினர். இந்த எழுத்து தேர்வில் தலித் உள்பட பல ஜாதியினர் தேர்ச்சி பெற்றனர்.
 
இந்த நிலையில் அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சூர் அருகிலுள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த யேது கிருஷ்ணன் என்ற 22 வயது வாலிபருக்கு நேற்று அர்ச்சகர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. இவருக்கு மணப்புறம் சிவன் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது.
 
உலகின் முதல் தலித் அர்ச்சகராக பதவியேற்க வந்த கிருஷ்ணனை கோவில் நிர்வாகிகள் மற்றும் தலைமை அர்ச்சகர் நேற்று வரவேற்றனர். தலைமை அர்ச்சகர் கிருஷ்ணனை கோவிலின் கருவறைக்கு அழைத்து சென்று மந்திரங்களை சொல்லிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments