பெங்களூரில் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (20:57 IST)
உலக மொபைல் போன் மார்க்கெட்டில் முதலிடத்தில் உள்ள சாம்சங், இந்தியாவில் தனது தயாரிப்புகளை அவ்வபோது அறிமுகம் செய்து வருகின்றது. இந்திய சந்தை என்பது மொபைல் போன் சந்தையில் மிகப்பெரியது என்பதாலும் இங்கு போட்டி அதிகம் என்பதாலும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது

இந்த நிலையில் பெங்களூரில் சாம்சங் நிறுவனம் ஒரு ஷோரூம் ஒன்றை சமீபத்தில் அமைத்துள்ளது. இந்த ஷோரூம்தான் உலகின் மிகப்பெரிய சாம்சங் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை பெருமையை உடைய இந்த ஷோரூம் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

பெங்களூரில் உள்ள முக்கிய பகுதியில் சுமார் 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாம்சங் ஷோரூமை அந்நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் இன்று திறந்து வைத்தார்.  இந்த ஷோரூமில் சாம்சங் நிறுவனத்தின் ஆரம்பகால மாடல்கள் முதல் லேட்டஸ்ட்டாக அறிமுகமான மாடல் வரை கிடைக்கும் என்பதுதான் இந்த ஷோரூமின் சிறப்பு

உலகின் மிகப்பெரிய சாம்சங் உற்பத்தி மையமும் இந்தியாவில் தான் இருக்கும் நிலையில் தற்போது ஷோரூமும் இந்தியாவில் உள்ளது இந்தியாவுக்கு சாம்சங் நிறுவனம் கொடுத்து வரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments