நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் கேம் ஸ்கேனர் பயன்படுத்த தடை – ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:08 IST)
டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் கேம் ஸ்கேனர் என்ற சீன செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு சீன நாட்டு செயலிகள் 106 க்கு இந்தியாவில் தடை விதித்தது. அதில் கேம் ஸ்கேனர் என்ற செயலியும் ஒன்று. இந்நிலையில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தின் வலைத்தளத்தை கையாளும் அதிகாரிகள், இந்த கேம் ஸ்கேனரைப் பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை அந்த ஆப்பை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கண்டறிந்து வேறொரு செயலி மூலமாக ஸ்கேன் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக கொரோனா அச்சத்தால் நீதிமன்றங்கள் ஆன்லைனில் நடப்பதால் பதிவு, ஆவணங்கள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் ஸ்கேன் செய்தே அனுப்பப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments