Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

Siva
புதன், 22 மே 2024 (11:31 IST)
கள்ளக்காதலை கணவர் மற்றும் குடும்பத்தினர் ஏற்காததால் இளம் பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி அண்டவர் மகேஷ் என்ற 42 வயது நபருடன் கள்ளக்காதலில் இருந்ததாக தெரிகிறது. கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு மகேஷ் உடன் விஜயலட்சுமி ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு குடும்பத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த விஜயலட்சுமி தனது கள்ளக்காதலன் மகேஷ் உடன் இணைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்த தற்கொலை இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments