Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களின் திருமண வயது மறுபரிசீலணை –சுதந்திர தின உரையில் மோடி அறிவிப்பு!

பெண்களின் திருமண வயது மறுபரிசீலணை –சுதந்திர தின உரையில் மோடி அறிவிப்பு!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:23 IST)
காலை கொடியேற்றி வைத்துவிட்டு இந்திய பிரதமர் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காரணமாக இந்த முறை சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க இந்தியா உறுதியேற்றுள்ளது. நம் நாட்டு பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்தும், போர் விமானங்கள் ஓட்டியும் வானத்தை தொடுகிறார்கள். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரிசீலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கையை வைத்து பெண்களின் திருமணவயதை நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக வாயில் சிக்கிக் கொண்ட அதிமுக! – முத்தரசன் காரச்சார கருத்து!