Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூனியக்காரி என்று பெண் எரித்து கொலை

Advertiesment
ஜாட்க்கண்ட்
, வெள்ளி, 9 டிசம்பர் 2016 (22:09 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியம் செய்தார் என்று வயதான பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்றவர் கைது செய்யப்பட்டார். 


 

 
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தை சேர்ந்த அனிதா சாய் என்பவருக்கு நவம்பர் மாதம் 15ஆம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு குழந்தை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி இறந்துவிட்டது.
 
மற்றொரு குழந்தையை காப்பற்ற, பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்ணிடம், தனது குழந்தையை குணப்படுத்துமாறு அனிதா சாய் கேட்டுள்ளார். அந்த வயதான பெண் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் இரண்டாவது குழந்தையும் இறந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அனிதா சாய், தனது குழந்தையை அந்த வயதான பெண் தான் சூனியம் வைத்து கொலை செய்துவிட்டார் என்று எண்ணி, அந்த பெண்ணை எரித்து கொலை செய்துள்ளார்.
 
இதானல் அனிதா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை பார்க்க வர வேண்டாம் - திமுக கோரிக்கை