Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 வயது சிறுமி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விற்பனை - ஏஜெண்ட் சரண்

16 வயது சிறுமி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விற்பனை - ஏஜெண்ட் சரண்
, ஞாயிறு, 8 மே 2016 (13:34 IST)
கோவாவில் 16 வயது சிறுமியை, எம்.எல்.ஏ.வுக்கு விற்பனை செய்த ஏஜெண்ட், போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
 

 
கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் அடானாசியோ மான்சராட்டே என்ற பாபுஷ். இவர், செயிண்ட் க்ரூஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் நேபாளத்தை சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
 
அந்தச் சிறுமி, பாபுஷிடமிருந்து தப்பி, பனாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாபுஷ் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், சிறுமியை எம்எல்ஏ-விடம் விற்பதற்கு காரணமான ஏஜெண்ட் ரோஸி பெரோஸ் என்பவரும், பனாஜியில் உள்ள மாநில குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமையன்று சரண் அடைந்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக வெற்றி பெற்றால் மோடிக்கு காவடி தூக்கும் - அருணன் தாக்கு