Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வருட காதல்… திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்த காதலன் – கத்தியால் குத்திய காதலி!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (10:06 IST)
ஆந்திராவில் திருமணத்துக்கு மறுத்த காதலனைக் காதலி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த காதல் ஜோடி தாத்தாஜி நாயுடுவும் பவாணியும். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலுக்கு தாத்தாஜியின் வீட்டில் பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து தாத்தாஜி தனது வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய ஒப்புக்கிண்டுள்ளார். இதையறிந்த பவாணி அவர் மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்துக்கொண்ட போது இது சம்மந்தமாக கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து பவாணியை அவரின் வீட்டில்  இறக்கிவிட்ட போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாஜியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இதையடுத்து பவாணியை கைது செய்த போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments