Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம்! அதிரடி நடவடிக்கை..!

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (19:43 IST)
நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு   படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சண்டிகர் விமான நிலையத்திற்கு இன்று நடிகை கங்கனா ரனாவத் வருகை தந்த போது திடீரென மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார். 
 
போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அவர் கன்னத்தில் அறைந்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கங்கனா ரனாவத் புகார் அளித்த நிலையில் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து சற்று முன் சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்பி மற்றும் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments